<$BlogRSDUrl$>
Tamil Blogs Wiki

Tamil Bloggers Database

Enter Record

View/ Search

Wednesday, November 12, 2003
 
(c)Hii

Tuesday, November 11, 2003
 
(c)Brasil

Monday, November 10, 2003

வினோபா கார்த்திக்.

 
இந்த வார வலைப்பூ ஆசிரியர் வினோபா கார்த்திக். இவருடைய வலைப்பூக்களில் பலவிதமான அருமையான விஷயங்களை எழுதி இருக்கிறார். எனக்கு அவற்றில் மிகவும் பிடித்தது, இவர் அருந்ததி ராயின் உரையை மொழி பெயர்த்துப்போட்டிருப்பதே. நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதேபோல த பியானிஸ்டுக்கும் சுவையான விமர்சனம் எழுதி இருக்கிறார்.

கிருபாவைத்தொடர்ந்து கலக்கவரும் வினோபா என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-மதி

 
summaathaan!

நன்றி க்ருபா!

 



இப்போது க்ருபா ஷங்கரைப்பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். ஜோக்கடித்துக்கொண்டே, சீரியஸாகவும் விஷயங்களைச்சொல்லக்கூடியவர். இவர் வலைக்குறிப்பு ஒன்றை உருவாக்கும் நாளை உங்களைப்போன்றே நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

-மதி


ஜேபி-சான் சொல்கிறார்...

 


அன்பர்களே,

'கடலை மிட்டாய்' என்றொரு எழுத்துரு மென்பொருள் இருக்கிறது. சற்றுமுன்னர் முகுந்தராஜ் அதனைக் கணினியில் போட்டுவிட்டார்.

கிருபா ஷங்கர் உருவாக்கியது.

கடலை மிட்டாய் என்பது TSCII/Roman Script Converter.

கடலை மிட்டாயில் இரண்டு சவுக்கங்கள் இருக்கின்றன. ஒரு சவுக்கம் தமிழுக்குரியது. இன்னொன்று ஆங்கிலம்.

ஒரு சவுக்கத்தில் தமிழில் டைப் செய்தால் இன்னொன்றில் அதற்குரிய ஆங்கில transliteration வருகிறது. அதுபோலவே ஆங்கிலச் சவுக்கத்தில் ஆங்கிலத்தில் அடித்தால் மற்றொன்றில் தமிழில்
வருகிறது.

சுலபமாக இயங்குகிறது. சும்மா முக்கி முழித்து வெட்டி ஒட்டும் சமாச்சாரமெல்லாம் இல்லை.
பச்சைக்கொம்பர்களும் எளிதாகச் செய்யலாம்.

தமிழ் பழம்பாடல்களை ஆங்கிலத்தில் transliteration செய்வதற்கு மணிக்கணக்கில் செலவிடவேண்டியதில்லை. தமிழ்ல் எழுத எழுத அதுபாட்டுக்கு ஒரு பக்கம் நடக்கிறது. உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளமுடிகிறது. நான் அனுதினமும் படுக்கையிலிருந்து எழுமுன் முதலில் அரை ஞாபகம் வரும்போதே சொல்லிக்கொள்ளும் அப்பரின் 'படைக்கலமாக உன்
நாமத்தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்' பாடலின் முதல் அடியை டைப் செய்து பார்த்தேன். மிகச் சரியாக வந்திருந்திருந்தது. இதனை உருவாக்கிய கிருபா ஷங்கருக்குப் பாராட்டுக்கள்.
மேற்படி மென்பொருளை 'பொன்னியின் செல்வன்' யாஹ¥க்குழுவின்·பைல்ஸ் பகுதியிலிருந்து கீழிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடலை மிட்டாய் என்பது எங்கள் மருத்துவக்கல்லூரி parlance-இல் வேறு ஒன்றைக் குறிக்கும்.
கிருபா ஷங்கர் ஏன் அந்தப் பெயரை வைத்தார் என்பது தெரியவில்லை.

அன்புடன்

ஜெயபாரதி

This page is powered by Blogger. Isn't yours? Feedback by backBlog Trackback by HaloScan.com